என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரியிடம் மோசடி"
- வியாபாரி 3 கட்டங்களாக ரூ.22,82,695 மதிப்பிலான உலர் பழங்கள் வாங்கியதாக தெரிகிறது.
- பல மாதங்கள் ஆகியும் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார்.
கோவை:
கோவை செல்வபுரம் சுண்டாக்காமுத்தூர் ரோடு பழனிசாமி காலனியை சேர்ந்தவர் அன்சர் பாஷா(வயது44).
இவர் உலர் பழங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மொத்த விற்பனை செய்யும் இவரிடம் செல்வபுரம் சத்யா நகரை சேர்ந்த வியாபாரி சாமி முருகன்(43), என்பவர் 3 கட்டங்களாக ரூ.22,82,695 மதிப்பிலான உலர் பழங்கள் வாங்கியதாக தெரிகிறது.
அதற்கான மொத்த பணத்தையும் 3 மாதங்களில் கொடுத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணத்தை கொடுக்காமல் சாமி முருகன் இருந்து வந்தார்.
அப்போது அன்சர் பாஷா, தனது பணத்தை கொடுக்கும்படி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சாமி முருகன் ஆட்களை வைத்து அன்சர் பாஷாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அன்சர் பாஷா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், உலர் பழங்கள் வாங்கி பணம் மோசடி செய்த சாமி முருகன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சாமி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்